
யாழ்ப்பாணம், ஏப் 13
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் இணைப்பு செயலாளராக முன்னாள் யாழ்.மாவட்டச் செயலர் இமெல்டா சுகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆளுநரின் தனிப்பட்ட உத்தியோகத்தர் பட்டியலில் நியமிக்கப்படும் ஆளணி மூலமே இந்த நியமனம் வழங்கப்படுகின்றது. இமெல்டா சுகுமார் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களின் அரச அதிபராக பணியாற்றியுள்ளார்.