பெங்களூ அணியை வீழ்த்தி சென்னை அணி முதலாவது வெற்றி !

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 22 போட்டியில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூ அணியை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 23 ஓட்டங்களால் வெற்றிக்கொண்டது.

மும்பையில் நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூ அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்து.

இதன்படி, முதலில் துடுப்பாடிய ராஜஸ்தான் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 4 விக்கட்டுக்களை இழந்து 216 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனை அடுத்து 217 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய பெங்களூ அணி, 20 ஓவர்கள் நிறைவில், 9 விக்கட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

சென்னை அணி சார்பில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சிவம் துபே ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *