இயலுமான உதவிகளை தொடர்ந்தும் செய்துவருகின்றோம் – சீனா

கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உதவுவதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

பெய்ஜிங்கில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சீன வெளிவிவகார அமைச்சின் ஊடக பேச்சாளர் ஜாவோ லிஜியன் இதனை கூறினார்.

சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஆரம்பித்ததில் இருந்து இரு நாடுகளும் பரஸ்பர ஆதரவையும் புரிந்துணர்வையும் வழங்கியுள்ளன என்றும் தெரிவித்தார்.

இலங்கையின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கு சீனா தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறது என்றும் தொடர்ந்தும் செய்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *