அரசாங்கத்தை தொடர்ந்தும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பசில் முயற்சி – விமல் குற்றச்சாட்டு

நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்படவேண்டும் எனில் புதிய அரசாங்கத்தை அமைக்க பிரதமரும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

113 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மை மூலம் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியும் என அவர்கள் கருதினால் அவர்கள் முற்றிலும் தவறானது என்றும் குறிப்பிட்டார்.

கொழும்பில் ‘தேசத்தை சரியான பாதையில் அழைத்துச் செல்வது’ இயக்கம் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் இன்று புதன்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.

பசில் ராஜபக்ஷ இன்னும் அரசாங்கத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சிக்கிறார் என்றும் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.

அத்தோடு நாடு நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நேரத்தில் புதிய இராஜாங்க அமைச்சர் ஒருவரை நியமிக்கப்பட்டுள்ளமைக்கும் அவர் அதிருப்தி வெளியிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *