5 ஆவது நாளாக காலி முகத்திடலில் தொடரும் போராட்டம்

கொழும்பு, ஏப் 13

அரசாங்கத்துக்கு எதிராக கடந்த 9 ஆம் திகதி காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 5 ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

நாளுக்கு நாள் அதிகரித்த வரும் விலையேற்றம் மக்களை பெரிதும் பாதித்துள்ளதுடன் ஜனாதிபதியை ஆட்சிப்பீடத்திலிருந்து அகற்றுவதற்கு இளைஞர்கள் யுவதிகள் போராட்டக்களத்தில் தொடர்ச்சியாக கூடாரம் அமைத்து இரவு பகலாக போராடி வருகின்றார்கள்.

இந்நிலையில் போராட்டக்காரர்களை நேரில் சந்தித்துப்பேசுவதற்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *