இராணுவ தளபதியின் பதவி நீட்டிப்பு சட்டபூர்வமானதில்லையா? பாதுகாப்பு அமைச்சசு விளக்கம்

பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவி நீட்டிப்பு சட்டப்பூர்வமானது அல்ல என செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் அவரது பதவி நீடிப்பு செல்லுபடியானது என தெரிவித்து சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.

சவேந்திர சில்வாவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு இன்னும் செல்லுபடியாகும் என்றும், அது 2021 டிசம்பர் 31, முதல் அமுலுக்கு வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை இராணுவத்தின் 23வது தளபதியாக கடந்த 2019 ஓகஸ்ட் 17 அன்று அப்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் அவர் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *