மந்திகை வைத்தியசாலையில் நீர் விநியோகம் தடையால் நோயாளர்கள் அவதி

பருத்தித்துறை, ஏப் 13

யாழ்.பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் நீர் விநியோகம் தடைப்பட்ட நிலையில் நோயாளர்கள் பல அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மந்திகை ஆதார வைத்தியசாலையின் மின்பிறப்பாக்கி பழுது பட்டமையல் நீர் விநியோகம் நிறுத்தப்பட்டிருக்கின்றது.
சுமார் 6 மணித்தியாலங்களாக நோயாளர்கள் மற்றும் குழந்தை பிரசவித்த பெண்கள் மலசல கூடத்தைப் பயன்படுத்த நீரின்மையால் அவதிப்பட்டதாக வைத்தியசாலையில் தங்கியிருந்த நோயாளர்கள் சிலர் தொிவித்திருக்கின்றனர்.

குறித்த வைத்தியசாலையில் நீர்த்தாங்கியில் சேமிக்கப்பட்ட நீரும் முடிவுற்ற நிலையில்
இரவு 10 மணியைக் கடந்தும் நீர் விநியோகம் சீராகப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *