
பருத்தித்துறை, ஏப் 13
யாழ்.பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் நீர் விநியோகம் தடைப்பட்ட நிலையில் நோயாளர்கள் பல அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மந்திகை ஆதார வைத்தியசாலையின் மின்பிறப்பாக்கி பழுது பட்டமையல் நீர் விநியோகம் நிறுத்தப்பட்டிருக்கின்றது.
சுமார் 6 மணித்தியாலங்களாக நோயாளர்கள் மற்றும் குழந்தை பிரசவித்த பெண்கள் மலசல கூடத்தைப் பயன்படுத்த நீரின்மையால் அவதிப்பட்டதாக வைத்தியசாலையில் தங்கியிருந்த நோயாளர்கள் சிலர் தொிவித்திருக்கின்றனர்.
குறித்த வைத்தியசாலையில் நீர்த்தாங்கியில் சேமிக்கப்பட்ட நீரும் முடிவுற்ற நிலையில்
இரவு 10 மணியைக் கடந்தும் நீர் விநியோகம் சீராகப்படவில்லை.