
தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியினை வெளியிட்டுள்ளார்.
அதன்படி அவரது வாழ்த்து செய்தியில்,
‘மலர இருக்கும் தமிழ் சிங்கள “சுபகிருது” புதுவருடம் சகல மக்களுக்கும் நல்ல ஆரோக்கியத்தையும், சுபீட்சத்தையும், மற்றும் செளபாக்கியங்களையும் வழங்கி மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு வழியேற்படுத்த எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்தித்து நல்வாழ்த்துகளை தெரிவிப்பதுடன், இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்களின் துன்ப துயரங்கள் நீங்கி அனைவரும் சந்தோசமாக இருக்க அனைவருக்கும் சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.