புத்தாண்டு சலுகையை அனுபவிக்க முடியாமல் ஏமாற்றமடைந்த மக்கள்

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மூதூர் சதோச கிளையில் இன்று புதன்கிழமை (13) காலை அரிசி,சீனி,பால்மா,தேயிலை உள்ளிட்ட 1950 ரூபாய் பெறுமதியான அத்தியவசிய பொருட்கள் அடங்கிய பொதி , சுமார் 700 ரூபாய் கழிவு விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.

100 பேருக்கு மாத்திரமே இவ்வாறு வழங்கப்பட்டதால் ஏனையோர் இச்சலுகையை பெறமுடியாமல் போனதாக கவலை தெரிவித்தனர்.

சித்திரை புத்தாண்டுக்காக கழிவு விலையில் சதோசவில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த போதிலும் குறிப்பிட்ட சிலருக்கே இது வழங்கப்பட்டதாகவும் தாம் இவ் சித்திரை சலுகையை அனுபவிக்க முடியாமல் போனதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

அத்தோடு அத்தியவசிய பொருட்கள் தீர்ந்து விட்டதாகவும் இதற்கு அரசாங்கம் உரிய தீர்வைப் பெற்றுத்தர வேண்டுமெனவும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *