வயல் காணியில் நின்றவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு!

கலென்பிந்துனுவௌ – கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் தனது வயல் காணியில் நெல் விதைத்துக் கொண்டிருந்தபோது குறித்த நபர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பெலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கஹட்டகஸ்திகிலிய – உபுல்தெனிய பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *