படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட, கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் படங்களுடன் நீதி கோரும் பதாதைகள் ‘கோட்டா வீட்டுக்குப் போ’ எனத் தொடர் போராட்டம் நடந்து வரும் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளன. ஊடகவியலாளர்கள் நிமலராஜன், சிவராம், லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னலிகொட, கீத் நொயார், போத்தல ஜயந்த ஆகியோரின் படங்களுடன் இந்தப் பாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
