
கோட்டா அரசுக்கு எதிராக காலிமுகத்திடலில் இன்று 5 ஆவது நாளாக போராட்டம் இடம்பெற்று வருகிறது.
இந்த நிலையில், ஜனாதிபதி செயலகம் முன்பாக கொல்லப்பட்ட ஊடகவியாளர்களின் உருவப்படங்கள் நீதி கோரி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை காணாமல்போன ஊடகவியலாளர் ப்ரகீத் எக்னெலிகொடவின் புகைப்படத்தை அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட பார்வையிட்டுள்ளமை பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.