கல்முனை துளிர் கழகத்தின் ஏற்பாட்டில் கழக அங்கத்தவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அன்பளிப்புடன் அம்பாரை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குற்பட்ட அன்னமலை 02, குடியிருப்புமுனை கிராமத்திலுள்ள வருமானம் குறைந்த மக்களுக்கு ஆடைகள் இன்றைய தினம்(13-04-2022) வழங்கி வைக்கப்பட்டது.புதிய மற்றும் ஓரிரு நாட்கள் பாவித்த நல்ல நிலையில் உள்ள ஆடைகளே இவ்வாறு வழங்கப்பட்டன. இந் நிகழ்வு சமூக ஆர்வலரும் துளிர் கழக நாவிதன்வெளி பிரதேச தலைவருமான திரு. R. சுஜிவன் அவர்களது தலைமையில், துளிர் கழக தலைவர் மற்றும் கழக அங்கத்தவர்களுடன் இடம் பெற்றது.இவ் ஆடைகளை வழங்கி வைத்த சமூக ஆர்வலர்களான திரு P. பிரேமானந்தன் மற்றும் நண்பர்கள், திருமதி A.H.ஹசீரா, திரு. P. டிலான் மற்றும் நண்பர்கள் மற்றும் கழக ஆலோசகர் திரு. P. கணேசமூர்த்தி அவர்களுடன் கழக அங்கத்தவர்களான திரு. M. ரோகன்,திரு. M. மோகன்ராஜ்,திரு. E. யசங்க,திரு. G. மேனன்,செல்வன். மிலன்,செல்வன். கிஷானுஜன், செல்வன். அனுக்சன், செல்வன் . கேஷான் ஆகியோர் மக்களுக்கான ஆடைகளை அன்பளிப்பு செய்திருந்தனர் . அவர்களுக்கு இம் மக்களின் சார்பிலும், கழகத்தின் சார்பிலும் மனம் நிறைந்த நன்றிகள்.





