கிளியில் 605 லீற்றர் டீசல், 279 லீற்றர் பெற்றோலுடன் இருவர் கைது

கிளி, ஏப் 13

கிளிநொச்சி – தர்மபுரம் மற்றும் விஸ்வமடு பகுதிகளில் அனுமதிப்பத்திரமின்றி எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 279 லீற்றர் பெற்றோல், 605 லீற்றர் டீசல் மற்றும் 300 லீற்றர் மண்ணெண்ணெய் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

38 மற்றும் 44 வயதான இருவரே குறித்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *