
மலரும் “சுபகிருது” வருட தமிழ் சிங்கள புத்தாண்டைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது வாழ்த்துச் செய்தியில்,
”சித்திரையே வா நம் வாழ்வில் நல் முத்திரை பதிக்க வா” என்று சொல்லும் மரபு காணப்படுகிறது இதன்மூலம் சித்திரையின் சிறப்பினை காணலாம்.
நாட்டில் ஏற்பட்ட கொவிட் தாக்கம் அதன் பின் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அனைவருடைய வாழ்க்கையிலும் பல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது .
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலைமையில் இருந்து நாட்டை மீட்பது அனைவருடைய கடமையாகும்.
ஆகவே மலரும் சித்திரை புத்தாண்டில் இருந்து மக்களுடைய அனைத்து துன்பங்களும் நீங்கி நாடு அபிவிருத்தியை நோக்கி முன்னேற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக. என குறிப்பிட்டுள்ளார்.