கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கான எச்சரிக்கை

கிளிநொச்சி, ஏப் 13

தற்போது பெய்து வரும் கன மழை காரணமாக இரணைமடு குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துவரும் நிலையில் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு அவதான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

தற்போது பெய்து வருகின்ற கனமழை காரணமாக இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 35 அடி 5 அங்குலம் ஆக அதிகரித்துள்ளது.

தொடர்ச்சியாக மழை பெய்யும் ஆக இருந்தால் இரணைமடு குளத்தின் நீர்வரத்தை கருத்திற்கொண்டு, குளத்தின் வான்கதவுகள் திறப்பதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளன.

எனவே, இரணைமடு குளத்தின் கீழ் பகுதியில் வாழும் மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *