
கொழும்பு, ஏப் 13
புத்தாண்டு பிறப்பதற்கு சில மணித்தியாலங்களே உள்ள நிலையிலும், காலி முகத்திடல் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் புதன்கிழமை ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் புத்தாண்டு விளையாட்டுக்களை விளையாடுவதையும் காண முடிந்தது.
இதற்கிடையில், போராட்ட தளத்தில் சுகவீனமடைந்த பல நோயாளிகள் இன்று காலை போராட்ட தளத்தில் உள்ள தற்காலிக சிகிச்சை மையத்தில் இருந்து வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அத்துடன், போராட்டக்காரர்களால் ´கோடாகோகம´ என பெயரிடப்பட்ட பகுதியில் தற்காலிக நூலகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இன்று காலை மேலும் பலர் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
மூத்த பாடகர் கலாநிதி ரோஹன வீரசிங்க மற்றும் கலைஞர்கள் குழுவினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு மூத்த கிரிக்கெட் வீரர்களான ரொஷான் மஹாநாம மற்றும் சம்பக்க ராமநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.