
தென்னாபிரிக்கா, ஏப் 13
தென்னாபிரிக்காவின் கிழக்கு பகுதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு 60 பொது மக்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், வெள்ளத்தினால் பல வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்க்பட்டுள்ளது.
இந்த பிரதேசத்தில் மின்நிலையங்கள் வெள்ளத்தில் முழ்கியுள்ளமையினால் மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனர்த்தங்கள் காரணமாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கபட்டுள்ளதாகவும் அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.