கொழும்பு, ஏப் 13
நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் இன்றுடன் ஐந்தாவது நாளாக காலி முகத்திடலில் இளைஞர்கள், யுவதிகள் உட்பட போராட்டத்தை நிகழ்த்தி வருகின்றனர்.
அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் பெரும் முனைப்புப் பெற்றுள்ள நிலையில் வித்தியாகசமான முறையில் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், போராட்டக்களத்தில் வெற்று நீர்ப்போத்தல்களால் #GoHomeGota என்று வடிவமைத்துள்ளார்கள் இளைஞர்கள்.
