யாழில் இனிமேல் குடும்ப அட்டைக்கு மட்டுமே அத்தியாவசிய பொருட்கள்-கே.மகேசன்.

யாழில் உள்ள சதோச நிலையங்களில் இனிமேல் குடும்ப அட்டைக்கு மட்டும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என யாழ் அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

அத்துடன் யாழிலுள்ள சதோச விற்பனை நிலையங்களில் நியாயமான விலையில் அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதோடு அவ்வாறு மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனேகமானவர்களுக்கு கிடைக்கப் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது.

ஆகவே இனிமேல் அத்தியாவசிய உணவுப் பொருட்களை பெறுரவதற்காக குடும்ப அட்டை நடைமுறையை நடைமுறைப்படுத்துமாறு சதோச நிலையங்களுக்கு அறிவித்தல்கள் வழங்கப்படள்ளதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *