நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் விலையேற்றம் காரணமாக தமிழர் தாயக பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் புத்தாண்டு வியாபாரம் கலையிழந்து காணப்படுகின்றது
மக்கள் பொருள் கொள்வனவு மற்றும் ஆடை கொள்வனவில் அதிகளவு ஆர்வம் காட்டாத நிலையில் டீசல் மற்றும் மண்ணென்னை கொள்வனவுகளுக்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது
அதே நேரம் மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக சீரற்ற காலநிலை நிலவி வருகின்றமையினால் பெரும்பாலான மக்கள் வீடுகளிலே முடங்கி காணப்படுவதும் குறிப்பிடதக்கது.


