கோர விபத்தில் இறந்த சிறுவனின் நீதிக்கு போராட்டம்

யாழ்ப்பாணம், ஏப் 13

யாழ்ப்பாணம் சத்திரத்துச் சந்தியில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த தாவடியைச் சேர்ந்த சிறுவன் அஜித்தன் அபிநயனின் மரணம் தொடர்பில் உரிய விசாரணையை மேற்கொள்ளுமாறு கோரியே அராலி மத்தி பகுதியில் போராட்டம் நடாத்தப்பட்டது.

இதன்போது அதி வேகத்தை குறைப்போம் விபத்துகளைத் தவிர்ப்பபோம், அபிநயனின் மரணத்திற்கு முறையான விசாரணை வேண்டும், மாணவர்களது உயிரைப் பறிக்காதே
என்ற வாசகங்கள் உள்ளடங்கிய பதாதைகளை ஏந்தி கோஷமிட்டவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். 

சமூக செயற்பாட்டாளர் பி.தனுசியா தலைமையில் நடைபெற்ற இக் கவனயீர்ப்பு போராட்டத்தில்
வலி,மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் க.இலங்கேஸ்வரன், சமூக செயற்பாட்டாளர் மா.நாகரட்ணம், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *