புத்தாண்டு பரிசுகள்; திண்பண்டங்களின் விலை எகிறியது!

தமிழ்- சிங்கள மக்களின் விசேட பண்டிகையான சித்திரை வருடப்பிறப்பு நாளை கொண்டாடப்படவுள்ளது.

இந்நிலையில் புத்தாண்டு திண்பண்டங்களின் விலைகள் இருமடங்காக உயர்ந்துள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அந்தவகையில் பயற்றம் பலகாரம், கொண்டை பலகாரம், அதிரசம் போன்றன 70 ரூபா தொடக்கம் 80 வரை விற்பனை செய்யப்படுகின்றன.

இதேவேளை நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுவரும் நிலையில் சித்திரைப் புத்தாண்டை எவ்வாறு மகிழ்வோடு கொண்டாட முடியும் என கேள்வியெழுப்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *