
வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
சிறு எண்ணிக்கையிலான பேருந்துகள் இன்று நாடு முழுவதிலும் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியான்ஜித் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் இன்று சேவையில் ஈடுபடுத்தப்படாது என சபையின் பணிப்பாளர் பந்துக்க ஸ்வர்னவன்ச தெரிவித்துள்ளார்.
நாளையதினம் வழமை போன்று பேருந்து போக்குவரத்து இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.