
அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலக முன்றலில் ஆரம்பமான அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று ஆறாவது நாளை எட்டியுள்ளது.
பெருந்திரளான இளைஞர் யுவதிகள் பொதுமக்கள் என பலரும் இரவு பகல் பாராது இடையிடையே கொட்டும் மழையினையும் பொருட்படுத்தாது தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை ஆர்ப்பாட்டக் காரர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பல்வேறு அமைப்புக்களும் தன்னார்வலர்களும் தொடர்ச்சியாக வழங்கிவருகின்றனர்.
இந் நிலையில் சித்திரைப்புத்தாண்டு தினத்தை தம்மோடு இணைந்து அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டாடுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.