6 ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்

கொழும்பு, ஏப் 14

கொழும்பு – காலிமுகத்திடல் பகுதியில் பொதுமக்கள் முன்னெடுத்துள்ள மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று ஆறாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது .

ஜனாதிபதி உள்ளிட்ட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த சனிக்கிழமை கொழும்பு, காலி முகத்திடலில் பாரிய அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகிய நிலையில், நேற்றும் கொட்டும் மழைக்கு மத்தியில் இரவோடு இரவாக மக்கள் எழுச்சிப் போராட்டம் தொடர்கின்றதோடு ஏராளமான இளைஞர் யுவதிகள் குறித்த போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *