அரசுக்கு எதிரான காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டம் இன்று ஆறாவது நாளாக இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் புதுவருடக் கொண்டாட்டங்களும் ஆர்ப்பாட்டத்தின் நடுவே சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
அதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்களால் பெயர்சூட்டப்பட்டுள்ள கோட்டா கோ கம வளாகத்திற்கு சற்றுமுன் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கென கதிரை தயார் செய்து குறித்த பகுதிக்கு வருமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

