பச்சிளம் குழந்தையை மோசமாக தாக்கும் தாய் – வெளியான பகீர் வீடியோ(Video)

தனது 9 மாத குழந்தையை படு மோசமாக தாக்கும் கொடூர தாயின் பகீர் வீடியோ இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இந்த சம்பவம் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சம்பா என்ற மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

தனது மடியில் படுத்திருந்த குழந்தையை குறித்த தாய், கன்னத்தில் அறைந்து,கழுத்தை நெரித்ததோடு, குழந்தையை மெத்தையில் தூக்கி வீசும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

இந்த காணொளியை அப் பெண்னின் உறவினர் ஒருவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளை, அவர்களும் குழந்தையை அடிப்பதை தடுக்கவில்லை.

இக் குழந்தையின் தந்தை வீடியோ ஆதாரத்துடன் அளித்த புகாரின் பேரில் தாய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சைக்கு பின் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *