இன்று இலங்கைக்கு டீசல் தாங்கிய மற்றுமொரு கப்பல் வருகை

கொழும்பு, ஏப் 14

எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை இந்தியா கடனடிப்படையில் வழங்கி வருகின்றது.

இந்த நிலையில் இன்றைய தினம் இந்திய கடனுதவித் திட்டத்தில் வழங்கப்படும் 40 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய கப்பலொன்று இலங்கையை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கூறியுள்ளது.

37, 500 மெட்ரிக் டன் அளவிலான பெட்ரோல் தாங்கிய கப்பல் ஒன்றும் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கூறியுள்ளது.

எவ்வாறாயினும் டீசல் மற்றும் பெற்றோலை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *