மானிப்பாயிலுள்ள வீட்டில் தரித்து நின்ற மோட்டார் சைக்கிள் திருட்டு!

மானிப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தரித்து நின்ற பல்சர் மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்றிரவு களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தெரியவருகையில்,

அராலியில் வாசிக்கும் மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் நேற்றிரவு மானிப்பாயில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார்.

அவர்கள் தூக்கத்திலிருந்தவேளை இரவு சத்தம் கேட்டு, எழுந்து பார்த்தார்கள்.

அப்போது அவரது மோட்டார் சைக்கிளை திருடன் திருடிக்கொண்டு செல்வதை அவதானித்தனர்.

திருடன் வேகமாக சென்றதால் அவர்களால் மோட்டார் சைக்கிளை மீட்க முடியவில்லை.

இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *