
கொழும்பு, ஏப் 14
நாட்டின் பொருளாதார நிலவரத்தின் மத்தியில் மக்கள் புதுவருடத்தை மகிழ்வுடன் கொண்டாடவில்லை என்பதே உண்மையாகும்.
இந்நிலையில்,புத்தாண்டுக் காலத்தில், பட்டாசு உட்பட கேளிக்கை வெடிகளினால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு வெகுவாக குறைவடைந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 24 மணிநேரத்தில் பட்டாசு உட்பட கேளிக்கை வெடிகளினால் ஏற்பட்ட விபத்தினால் ஒருவர் மாத்திரமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதேநேரம், வீதி விபத்துக்களினால் 38 பேரும், வீடுகளில் இடம்பெற்ற விபத்துக்களினால் 20 பேரும், கீழே வீழ்தல் உள்ளிட்ட விபத்துக்களினால் 45 பேரும், கேளிக்கைகளின்போது இடம்பெற்ற விபத்துக்களில் 27 பேரும் குறித்த காலப்பகுதியில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.