கொழும்பு, ஏப் 14
சிங்கள, தமிழ் புத்தாண்டிலும் மக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்ததை காணமுடிந்தது.
இன்று அதிகாலை 4 மணி முதல் கொம்பனிதெருவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக மக்கள் காத்திருந்தனர், ஆனால் புத்தாண்டு பிறக்கும் வரை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஊழியர்கள் எரிபொருள் நிரப்ப மறுத்துள்ளனர்.
மேலும் யாழ்ப்பாணத்திலும் அதிகாலை முதல் எரிபொருள் கொள்வனவுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை கண்டுகொள்ள முடிகின்றது.
