
இலங்கையின் பொருளாதார குழப்பங்கள் தற்போது எல்லை மீறி போய்க் கொண்டிருக்கின்ற சூழலில் இலங்கை மக்கள் தமது வீடுகளை விட்டு வீதிகளில் இறங்கி தொடர் போராட்டங்களையும் அரசிற் கெதிரான விமர்சனங்களையும் இடைவிடாது பரப்புரை செய்து கொண்டிருக்கின்ற நிலைமையில் இலங்கை அரசாங்கம் தனது அதிகாரத்தை விட்டுக் கொடுக்காது பிடித்துக் கொண்டு இருக்கின்ற மறுபக்கத்தில் எதிர்க் கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்காக தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.
இந்த சூழலில் இலங்கையின் தற்போதைய முழுமையான பார்வையினை இன்றைய ஆய்வில் நாம் பார்க்க இருக்கின்றோம்.
இலங்கையின் வெளிநாட்டு கடன் தற்போது எல்லை மீறிய நிலையில் காணப்படுகின்றது. 2019 இல் ஆட்சிக்கு வந்த ராஜபக்க்ஷ அரசு இலங்கையின் பொருளாதாரத்தை தலைகீழாக மாற்றியமைத்துள்ளது.
இலங்கை தனது வருமான வரியினை குறைத்து மக்களிடம் நற்பெயரை பெற முயற்சித்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக எதிர்பாராத வீழ்ச்சிகள் பொருளாதாரத்தில் ஏற்பட தொடங்கின.
குறிப்பாக இலங்கையின் சுற்றுலாத்துறை பாரிய வீழ்ச்சியை சந்தித்ததுடன் ஏற்றுமதிகளும் தடைப்பட்டிருந்த நிலையில் இலங்கையின் கடன் வட்டி வீதம் கடலலை வேகத்தில் எகிறிச் சென்றது.
இன்று இலங்கையின் கையிருப்பில் உள்ள நிதியை விட இலங்கை வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய நிதி பன் மடங்கு அதிகம் என்பது இலங்கையின் தற்போதைய துர்ச் செய்தி.
இலங்கை வெளிநாடுகளிடம் பட்ட முழு கடன் தொகையானது கிட்டத்தட்ட 51 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இந்நிலையில் வருகின்ற யூலை மாதத்திற்குள் வெளிநாட்டுக் கடனில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை வட்டித் தொகையாக செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்ற அதேவேளை 2022 வருட முடிவிற்குள் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டிய ஒப்ப ரீதியிலான கட்டாயத்திற்குள் இருக்கின்றது இலங்கை.
இதேவேளை கடந்த மார்ச் மாதம் வரையிலான கணிப்பின் படி இலங்யைில் சேமிப்பில் இருக்கின்ற மொத்த நிதி நிலுவையானது 2 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும் எனவே இந் நிதியினை வைத்துக் கொண்டு கடன்களையும் செலுத்தி நாட்டின் வருமானத்தையும் பராமரிக்க முடியாது என்பது தெட்டத் தெளிவாக தெரிகின்ற உண்மை.
மேற்படி கடன் தொகை அதிகரிப்பதற்கு பல காரணங்ள் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை வெளிநாடுகளிடமிருந்து கடன் பெற்ற முறைகளை ஆய்வாளர்கள் ஆராய்கின்ற போது அதிகமான நிதி லஞ்சம் மற்றும் ஊழல் முறைகளில் கறுப்பு நிதியாகவும் உள்வாங்கப்பட்டிருப்பதும் அவை கடன் என்ற பெயரில் இலங்கைக்கு பரிமாறப்பட்டிருப்பதாகவும் குறிப்பாக நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணியில் சுமார் 822 மில்லியன் அமெரிக்க டொலர்கள் லஞ்ச ஊழல்களாக அதிகரித்த நிநி உள்வாங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி குறிப்பிட்ட நிதியானது ஒரு நெடுஞ்சாலை அமைத்தலில் பெறப்பட்ட ஆதாரம் என்பதுடன் இலங்கையில் அண்மையில் அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகள் மற்றும் ஏனைய அபிவிருத்தி பணிகளை இணைத்துப் பார்க்கும் போது ஸ்ல்லியன் zillions பெறுமதியிலான அமெரிக்க டொலர்கள் கண்மூடித்தனமான முறையில் லஞ்ச ஊழல்களாக பாவிக்கப்பட்டு இறுதியில் அவை அப்பாவி மக்களின் வயிற்றில் அடிக்கின்றதுடன் அப்பாவி சிறுவர்களின் வாழ்வை பாழாக்குகின்ற நாசகார பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
ஆதாரம்📍👇
[[Highway Robbery 2.0
- The Chinese Embassy has categorically stated in its letter addressed to the President regarding the fraudulent transactions that has occurred in the construction of just 20km of the Central Expressway.
- It is claimed that $822 million in excess was syphoned off /funneled into the pockets of those in higher echelons.
- For illustration purposes lets take today’s average FX rate to calculate this:
$822,000,000 x 300
= LKR 246,600,000,000 - Fraud per km is. $ 41,100,000 or LKR. 12,330,000,000
- The Estimated total distance of the Central Expressway (E04) is 137km.
- 137 x $ 41,000,000 = $5,617,000,000 or LKR.16,851,000,000,000 (unimaginable)
- This is from one project only, the combined loot will go into the zillions.
- This loot alone is enough to sustain more than 10 generations of these politicians, assuming they spend 1miilion a day( which is highly unlikely).]]
இந்நிலையில் இலங்கையின் வரலாற்றில் 1948 ற்கு பின்னர் இப்படியான பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவது இதுதான் முதன்முறை என்பதுடன் மக்களின் கொந்தளிப்பு எல்லை கடந்து செல்வதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
இலங்கையில் மக்கள் குறிப்பாக தலைநகர் கொழும்பு வாழ் மக்கள் தமது வீடுகளை விட்டு கொழும்பு காலி முகத்திடலில் சிறு கொட்டகைகளை அமைத்து இரவு பகல், மழை வெயில் என பாராது இலங்கை அரசிற்கெதிராகவும் ராஜபக்க்ஷ குடும்பத்திற்கு எதிராகவும் மாபெரும் தொடர் போராட்டங்களை 5வது நாளாகவும் மேற்கொண்டு வருகின்ற நிலையில் நேற்யை தினம் பிரதம அமைச்சர் மகிந்த ராஜபக்க்ஷ போராட்ட காரர்களை சந்திக்க முயற்சித்த வேளையிலும் போராட்டக்காரர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன் ராஜபக்க்ஷ குடும்ப உறுப்பினர்கள் எவரையும் நாங்கள் சந்திப்பதற்கு விரும்பவில்லை.
அவர்கள் ஆட்சியில் இருந்து வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதே எங்களின் ஒரே கோரிக்கை. அதற்காகவே நாங்கள் இங்கே தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம் என தெரிவித்த நிலையில் இலங்யைின் அனைத்து துறைகள் மற்றும் அமைப்புக்கள் என இன சமய சாதி மொழி வேறுபாடுகள் என்பவற்றைக் கடந்து மேற்படி போராட்டத்தில் ஒன்றித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை வாழ் வெளிநாட்டு பிரஜை, “ராஜபக்க்ஷவிற்கு நன்றி கூற வேண்டும் காரணம் இன ரீதியிலும் சமய ரீதியிலும் மொழி ரீதியிலும் முற்றிலும் பிளவு பட்டு பிரிந்திருந்த இலங்கை தேசத்தை உங்களது செயற்பட்டாடுகளினால் ஒன்று சேர்த்துள்ளீர்கள்.
இனி இலங்கை தேசம் ஒற்றுமையாக செயற்படும் என தாம் நம்புவதாக தெரிவித்திருந்த அதேவேளை பொருளாதார வீழ்ச்சியின் கொடூரத்திற்குள்ளும் விலை வாசிகளின் மோசமான ஏற்றத்திற்குள்ளும் சிக்கி வாழ முடியாது வாழ்ந்து கொண்டிருக்கும் அன்றாட கூலித் தொழில் செய்யும் இலங்கை வாழ் பிரஜை ஒருவர் கருத்து தெரிவிக்கும் போது, “வெளிநாடுகளிடமிருந்து கடன்களை பெறுவதற்குப் பதிலாக ஒன்றோ இரண்டு அணு குண்டுகளை அமெரிக்கா அல்லது ரஷ்யாவிடமிருந்து வாங்கி போட்டு விடுங்கள்.
அப்போது நாங்கள் எல்லோரும் இறந்து விடுகின்றோம். எங்களால் வாழவும் முடியவில்லை இறக்கவும் முடியவில்லை. இலங்கையை அழித்து விடுங்கள். பின்னர் ஒரு காலத்தில் புதிய நாடாக உதயமாகட்டும்” என இலங்கை மீதும் இலங்கை அரசியல் பொருளாதார நிலை மீதும் வெறுப்பேட்பட்ட நிலையில் மேற்படி கருத்தினை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தற்போதைய சூழலில் அத்தியவசிய தேவைகள் உச்சம் தொடும் நிலையில் காணப்படுகின்றன. சாதாரண மக்களால் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலையில் காணப்படுகின்றனர்.