
நியூயோர்க், ஏப் 14
நியூயோர்க்கில், சுரங்க ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள சுரங்க ரயில் நிலையத்தில், துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில், 10 பேர் படுகாயமடைந்தனர். உயிர் பிழைக்க அங்கிருந்து தப்பி ஓடும்போது கீழே விழுந்து, 13 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் அடையாளத்தை, பொலிஸார் கண்டறிந்தனர்.
62 வயதான அந்த நபரின் பெயரை வெளியிடாமல், அவரின் அங்க அடையாளங்கள் குறித்த விபரங்களை மட்டும், பொலிஸார் வெளியிட்டனர்.
இந்நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக நியூயோர்க் நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.