
இத்தாலியின் மிலானோ நகருக்கான கொன்சியூலர் ஜெனரலாக சிங்கள திரைப்பட நடிகர் பந்து சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த பதவியில் இருந்த இலங்கையின் மூத்த பெண் பாடகியும் இசைக்கலைஞருமான நீலா விக்ரமசிங்க (Neela Wickramasinghe) அண்மையில் காலமானதைத் தொடர்ந்து, குறித்த பதவிக்கு தற்போது பந்து சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பந்துட சமரசிங்க கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது புதிய நியமனம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.