
சிறைச்சாலை சம்பவங்களுடன் தொடர்புடைய அமைச்சரின் இராஜினாமா அரசாங்கத்தின் முதுகெலும்பற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷா நாணயக்கார தெரிவித்தார்.
குடிபோதையில் சிறைச்சாலைகளுக்குள் நுழைந்து கைதிகளை கைத்துப்பாக்கியால் மிரட்டும் நபருக்கு நாடாளுமன்ற உறுப்பினராக அல்லது அமைச்சராக செயல்பட தார்மீக உரிமை இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷா நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இராஜினாமாவை நியாயப்படுத்த மற்ற அமைச்சர்கள் எந்த வெட்கமும் இல்லாமல் முன் வருகிறார்கள் என்றும் மனுஷா நாணயக்கார தெரிவித்தார்.
மற்ற இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதற்காக லோஹான் ரத்வத்த நகை திருட்டில் ஈடுபட வேண்டும் என்று விமல் வீரவங்ச கூறியதாக மனுஷா நாணயக்கார சுட்டிக்காட்டினார்.
சிறந்த எதிர்காலத்துக்கான நிபுணர்கள் என்று கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்தின் சிறந்த எதிர்காலத்துக்கான நிபுணர்கள் செயல் குறித்து இப்போது முழு நாட்டுக்கும் தெளிவாகிவிட்டது என்றும், ‘தப்பு செய்தால் முதலில் வீதியில் இறங்கி போராடுவது நாங்கள் தான்’ என்று சொன்ன பொட்டுக்கு வாக்களித்த வாக்காளர்கள் இன்று தேடிப் பிடிக்க முடியவில்லை என்றும் மனுஷ நாணயக்கார தெரிசித்தார்.
சிறைகளுக்குச் சென்றதாகவும், வேறு எந்த சம்பவங்களும் நடக்கவில்லை என்றும் லோஹான் ரத்வத்த கூறிய கருத்துக்கு மனுஷா நாணயக்கார பதிலாளித்தார். கட்டை காற்சட்டை அணிந்து, குடிபோதையில் நடு இரவில் சிறைச்சாலையில் மேற்கொண்ட கண்காணிப்பு சுற்றுப்பயணம் என்னவென்று தெரியவில்லை -என்றார்.