
கொழும்பு, ஏப் 14
காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக ஒழுக்காற்று, சட்டநடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இந்த அதிகாரி வியாழக்கிழமை காலை கட்சி சார்பற்ற போராட்ட களத்திற்குச் சென்று உத்தியோகபூர்வ சீருடையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பொலிஸ் உத்தியோகத்தர் பல தடவைகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டவர் எனவும், 1999 இல் சட்டவிரோத மரக்கடத்தலிற்காகவும் 2013 இல் போதைப்பொருள் வைத்திருந்தமைக்காகவும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவரும் தகவல்களின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.