
திருகோணமலை நகரில் இன்று (14) நண்பகல்முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லாமையினால் நிலையங்கள் வெறிச்சோடிக்காணப்பட்டன.
இதனால் எரிபொருள் நிரப்ப வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர்.
புது வருடத்தை முன்னிட்டு கூட எரிபொருளுக்கும் பாரிய தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
எரி பொருள் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்குவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
புது வருடத்திலாவது வெளியில் பயணங்களை மேற் கொள்வது கூட இவ் எரி பொருள் பற்றாக் குறை பிரதான காரணமாக உள்ளதாகவும் மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
எரி பொருள் நிரப்பு நிலையங்களில் எரி பொருள் விநியோகம் இடம் பெற்றாலும் பல மணி நேரம் நீண்ட வரிசையில் இருந்தே பெற வேண்டியதொரு நிலைக்கு தள்ளப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.