
கொழும்பு, ஏப் 14
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கலன்களில் பெற்றோல், டீசல் வழங்கப்பட மாட்டாது என்று கூறிய நிலையில் தற்பொழுது அவசர தேவையின் நிமித்தம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேவையின் நிமித்தம் விசேட அனுமதி பெற்றவர்களுக்கு மாத்திரமே கலன்கள் மற்றும் பீப்பாய்களில், நிரப்பும் நிலையங்களில் பெற்றோல், டீசல் வழங்கப்படுமென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளார்
எனவே, அனுமதி வழங்கப்படாத எந்தவொரு நபருக்கும், பீப்பாய்கள் மற்றும் கலன்களில் டீசல் அல்லது பெற்றோல் வழங்கப்படமாட்டாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.