ஜனாதிபதி மௌனம் களைய வேண்டும் – நாமல்

மக்கள் ஏன் அரசாங்கத்தின் மீது கோபமாக உள்ளனர் என்பது தமக்கு புரிகிறது என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இருப்பினும், இப்போது கோபத்திற்கான நேரம் மட்டுமல்ல, தீர்வுக்கான நேரம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் .

வெளிநாட்டு ஊடகமொன்று வழங்கிய செவ்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் .

மேலும் ஜனாதிபதியும் அரசாங்கமும் நாட்டிற்கான அவர்களின் திட்டங்கள் குறித்து இன்னும் வெளிப்படையாகவும் குரல் கொடுத்திருக்க வேண்டும் என்பதோடு முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் அதைச் சமாளிப்பதற்கான அவரது திட்டங்கள் குறித்து அதிகம் குரல் கொடுத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் தேவையான அளவுக்கு வெளிப்படைத்தன்மையுடன் இருக்கவில்லை என்பதையும் , ஜனாதிபதியின் தற்போதைய மௌனம் நிலைமைக்கு உதவவில்லை என்பதையும் ஏற்றுக்கொண்ட நாமல், “ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றி தனது திட்டங்களை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார் .

அத்தோடு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது அவர்களின் உரிமையை என்றாலும் அத்தகைய கோபம் பயனற்றது மற்றும் மேலும் நெருக்கடியை உருவாக்கக்கூடும் என்று அவர் மேலும் கூறினார் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *