புத்தாண்டுக்காக சென்றவர்கள் கொழும்பு திரும்ப போக்குவரத்து சேவைகள் விரிவுபடுத்தப்படும்!

புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் கொழும்புக்குத் திரும்புவதற்கு இலங்கை போக்குவரத்துச் சபை போக்குவரத்துச் சேவைகளை விஸ்தரிக்கும்.

கூடுதல் பஸ்கள் சேவையில் சேர்க்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதற்காக கூடுதலாக 200 பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமைக்குள் பயணிகள் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றார்.

இதேவேளை, கிராமப் புறங்களுக்குச் சென்ற பயணிகள் கொழும்பு திரும்புவதற்காக எதிர்வரும் 17ஆம் திகதி முதல் பல விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *