தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, பல மாவட்டங்களிலும் தண்ணீருக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள 6 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 30,000 க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள், தற்போது பவுசர்களால் வழங்கப்படும் குடிநீரையே பயன்படுத்துகின்றனர் என மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு கூறுகிறது.
அந்த வகையில், வெலிகந்த, திம்புலாகல, ஹிங்குரகொட, தமன்கடுவ, லங்காபுர மற்றும் மெதிரிகிரிய பிரதேச செயலகங்களே குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனை, மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவின் உதவி இயக்குனர் உபுல் நாணயக்கார நேற்று சனிக்கிழமை (18) இதை தெரிவித்தார்.
அவர்களில் பெரும்பாலோர் வெலிகந்த பிரதேச செயலகத்தைச் சேர்ந்தவர்களாவர். அங்கு 11 கிராம அலுவலர் பிரிவுகளில் வசிக்கும் 4,659 குடும்பங்களைச் சேர்ந்த 14,700 நபர்கள் குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர்.
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்திலும் தண்ணீருக்கான தட்டுப்பாடு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





