டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா – புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியீடு

<!–

டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா – புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியீடு – Athavan News

டெல்லியில் கடந்த 40 நாட்களில் இல்லாத அளவுக்கு நேற்று புதிதாக 325 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அதிகளவில் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து பாடசாலைகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் அடிக்கடி கை கழுவுதல், சானிடைசர் பயன்படுத்துவது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும் புதுவேகம் எடுக்கும் பரவலை அரசு கண்காணித்து வருவதாக தெரிவித்த துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, பாடசாலைகளில் கடைபிடிக்கவேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியிடப்படும் என தெரிவித்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *