
கொழும்பு, ஏப் 15
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக மீண்டும் டெங்கு நோய் அதிகரிக்க கூடிய அச்சுறுத்தல் நிலவுவதாக சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர்.
இதன்படி, டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தின் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
வழமையாக ஏப்ரல் மாத நடுப்பகுதி முதல் மே, ஜூன் மாதங்கள் வரை டெங்கு பரவல் அதிகரித்து காணப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.