பொது இடத்தில் அநாகரிகமாக குழப்பம் விளைவித்த இராணுவ சிப்பாய்கள்! கூண்டோடு கைது 

திருகோணமலை – கோமரங்கடவல பகுதியில் மது அருந்திய நிலையில் குழப்பம் விளைவித்த நான்கு இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நான்கு இராணுவ சிப்பாய்களும் பொது இடத்தில் மது அருந்திவிட்டு அநாகரிகமான முறையில் செயற்படுவதாக பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைக்க பெற்றுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குறித்த நான்கு இராணுவ சிப்பாய்களையும் கைது செய்துள்ளனர்.

கைதானவர்கள் கோமரங்கடவல – கரக்கஹவெவ பகுதியைச் சேர்ந்த 25 முதல் 30 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என மேலும் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *