கிளிநொச்சி அக்கராஜன் வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்திய அதிகாரி ஒருவர் கடமை நேரத்தில் தனது மேசையின் மீது கால்களை வைத்தவாறாக கடமையாற்றும் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
குறித்த வைத்தியரின் செயற்பாடு தொடர்பில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளரை எமது செய்திச் சேவை தொடர்புகொண்டு சம்பவம் தொடர்பில் கேட்டபோது,
குறித்த வைத்தியர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதுடன் கால் அகற்றப்படவேண்டிய நிலையில் தற்போது அதற்குரிய மாற்று வைத்தியத்தை மேற்கொண்டு வருகின்றார்.
இந்நிலையில் வைத்தியர் தனது காலினை கீழே வைத்து இருக்கமுடியாத நிலையில் மேசையின் மேலே வைத்துள்ளதாகவும் அத்துடன் குறித்த வைத்தியர் ஓய்வு பெற்றுச் செல்லும் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.


