
கொழும்பு காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக கடந்த 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று வரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இனமத பேதங்களை கடந்து, இலங்கையர்கள் என்ற ரீதியில் மக்களின் எழுச்சிப் போராட்டம் தொடர்ந்தவாறு உள்ளது.
இந்த நிலையில், நேற்றைய தினம் ஆர்ப்பாட்டக் காரர்களால் தமிழ் – சிங்கள புத்தாண்டு கொண்டாடப்பட்டுள்ளதுடன், கிறித்தவர்களின் ‘கால் கழுவுதல்’ சடங்கு நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கிறிஸ்தவர்கள் தங்கள் நம்பிக்கை மற்றும் சடங்குகளை ஏனைய மதத்தினருடன் பகிர்ந்து கொள்ளும் அழகான தருணம் காலிமுகத்திடலில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.