8500 தொன் எரிவாயு விரைவில் கிடைக்கும்: லிட்ரோ

கொழும்பு, ஏப் 14

இலங்கைக்கு 8,500 மெட்ரிக் தொன் எரிவாயு விரைவில் கிடைக்கும் என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. இதனிடையே, தமது உற்பத்திப் பணிகள் வரும் திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பமாகும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் தலையீட்டுடன் உலக வங்கியின் உதவியுடன் எரிவாயு இறக்குமதிக்காக 10 மில்லியன் டொலர்கள் கிடைக்கப்பெறவுள்ளதாகவும் அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளது.

இதேவேளை, இந்த மாதத்தில் இதுவரை 11 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிவாயு நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *