விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுப்பு

கொழும்பு, ஏப் 15

புத்தாண்டை முன்னிட்டு   வெளிமாவட்டங்களுக்கு  சென்றிருந்த மக்கள்   கொழும்பு நகருக்கு திரும்புவதற்கு இன்று முதல் போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய  இன்று முதல் விசேட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி இன்று முதல் மேலதிகமாக  200 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின்  பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் 17 ஆம் திகதிக்குள்  பயணிகள் போக்குவரத்து சேவை  முழுமையாக  வழமைக்கு கொண்டுவரப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் கொழும்பிற்கு திரும்புவோருக்காக நாளை மறுதினம் முதல் மேலதிக ரயில்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *