
கொழும்பு, ஏப் 15
காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் 7ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இலவச 4G – 5G வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, போராட்ட களத்துக்கு அருகாமையில் தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
எனினும், இதுவரை அதற்கான இணைப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.